மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான “மண்டாடி” திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் நடைபெறும் பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேற்று (செப்.10) வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ராமநாதபுரத்தின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
