Skip to content

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் ஜெயமூர்த்தி. இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் குருவாலப்பர் கோயில் அதே பகுதி அதே தெருவை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் பேரில் விசாரணை செய்து ஜெயமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!