இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 202 – 23 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் கிராமப்புற திருக்கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள திருக்கோவில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின். வரைவோலைகளை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதில் முதலாவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2022 – 2023 ஆம் ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் 1,250 கிராமப்புற பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள தலா ரூ. 2 லட்சம் வீதம் , 50 கோடி ரூபாய்க்கான வரைவோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் அடையாளமாக இன்று 20 திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளுக்கு வரைவோலையை வழங்கினார்.

