Skip to content

சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு… திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி, நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சியில் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடிந்து சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ‌ நவலூர் குட்டப்பட்டு முதல் நாவலூர் சாலை வரை உள்ள பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது பின்னால் டூவீலரில் வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து சென்றுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த சாந்தி சத்தமிட்டுள்ளார்.  உடனடியாக அந்த 2 மர்மநபர்களுக்கு செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். இச்சம்பவம்  சாந்தி ராம்ஜி நகர் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!