Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை வளாகத்தில் வெடிகுண்டு கண்டறியும் சோதனை செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!