திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் ஜெமி கண்ணன். இவரும் துவாக்குடியை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரும் சிறுகனூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் கல்லூரி தேர்வை முடித்துவிட்டு பைக்கில் வந்தபோது, சமயபுரம் உப்பாற்று பாலத்தில் பைக் விபத்துகுள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரையும் தனியார் மருத்துமனையில் அனுமதித்த நிலையில், கோகுல்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
