சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக தலைசுற்றல், மயக்கம் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
