பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இச்செயல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும், இதற்கு பதிலடியாக ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைகளுக்கும் உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
