திமுக பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டி வரும் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர், அமைச்சர் மற்றும் அவரது தந்தை மீது இப்புகாரை அளித்துள்ளார். நிர்மல்குமார் முன்பு பாஜக, அதிமுகவில் இருந்தபோது முறைகேடாக நிலங்களை ஆக்கிரமித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
