நெல்லை வீரவநல்லூரில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வனப்பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணன் என்பவரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவாளால் வெட்டியதால், தற்காப்புக்காகப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இதில் இடது காலில் காயமடைந்த கிருஷ்ணன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
