எந்தக் கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டும்தான் பதிலளிக்கிறார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. காவல்துறை மானியக்கோரிக்கையில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. திமுக, தவெக மாறிமாறி குறைசொல்லிக்கொண்டே நேரத்தை வீணடித்து வருகின்றனர். குற்றங்களை தடுக்க முடியாது என கூறுகிறார்கள். தவெக அரசு செயலிழந்த அரசாக உள்ளது என்றார். என்றார்.
