வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜனவரியில் தீர்ப்பளிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,

கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SIR வழக்குகளில் இனி புதிய மனுக்கள் ஏற்கப்படாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு தெரிவித்துள்ளது.

