Skip to content
Home » திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர்

சண்முகநாதன். இவரது மகள் 15 வயதான மகள் மோனிஷா.
இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும மோனிஷா வீட்டில் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள வேலைகள் ஏதும் செய்யாமல் இருந்துள்ளார். இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!