திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 16ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நம்பர் 1 டோல்கேட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி, செஸ் வரியை குறைத்து விலைவாசியை கட்டுப்படுத்து,
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கு, குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கு, இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகன ஓட்டுனர்களையும் கொலை குற்றவாளியாக்கி 10 ஆண்டு சிறை தண்டனை, 7 லட்சம் அபராதம் விதிக்கும் பாரத நியாய ஹீட்டா சட்டப்பிரிவு 106(1) (2 )திரும்பப் பெறு,
விவசாயிகளின் உரம், பூச்சி மருந்து மானியத்தில் வழங்கி விவசாயிகளின் விலை பொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் கூடுதல் விலை வழங்கு, 100 நாள் திட்டத்தை 200 நாள் ஆக்கி ரூ. 600 தினக்கூலி வழங்கி நகர்ப்புறத்தில் விரைவுப்படுத்து,
உணவு, மருந்து, இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்,
கார்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு சாமானிய மக்களிடம் வரி கொள்ளை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், சிபிஐ விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவசூரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிபிஎம் விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், சிஐ டியு ஆட்டோ சங்கத்தலைவர் சேகர், விசிக ஏகவலைவன் சிபிஐ பசுபதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், விவசாய சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் மருது சக்தி நன்றியுரை வழங்கினார்.