இந்திய ராணுவம் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ள நிலையில் இன்று காலை பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து 3 முறை குண்டு வெடித்ததாகவும், இதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ட்ரோன் மூலம் இந்த தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் கூறுகிறது.