திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது
எடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை விற்ற எடத்தெரு சுலைமான் தெருவைச் சேர்ந்த சச்சின் ( 23)பீமநகர் கீழ தெருவைச் சேர்ந்த அப்பு (23)
போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
புகையிலைப் விற்றவர் கைது
திருச்சி செசன்ஸ் கோர்ட் பகுதிகளில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆல் இந்தியா ரேடியோ அருகே புகையிலை விற்றதிருவரம்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் ( 54 )
என்பவரை போலீசார் கைது செய்தனர்.
