குதிரைபேரம் குறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். த.வெ.க. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. த.வெ.க. குதிரைபேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநர் மாளிகை, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தி.மு.க. புகார் கடிதம் அளித்துள்ளது.
ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கூறியதாக வைகோ பேசியதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வைகோ பேசியதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டினிடம் த.வெ.க.வினர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து த.வெ.க.வில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர். குதிரை பேரம் நடத்துவதற்காக த.வெ.க. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த 6 பேர் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். கட்சியில் மாற த.வெ.க.வினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாக கூறியுள்ளார் – தி.மு.க. மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
