மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதியதில், மனைவி விசயலட்சுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். கணவர் பாலமுருகன் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

