திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த வயதான பெண்மணி யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
