Skip to content

முர்மு உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை: சற்று நேரத்தில் போப் உடல் நல்லடக்கம்

  • by Authour
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ( 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில்  இறைவனடி சேர்ந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
நேற்று முனதினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 3-வது நாளாக நேற்றும் போப் ஆண்டவரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் அஞ்சலி செலுத்தினர். இதனால் புனித பீட்டர் சதுக்கம் நிரம்பி வழிந்தது.
ருப்பலி முடிந்ததும்,  உலகத்தலைவர்கள்   போப் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்கள். அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப்,  இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு,  தமிழகத்தின் சார்பில் அமைச்சர்  நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ.,  இனியோ இருததுகிறார்கள். அது முடிந்ததும் போப் ஆண்டவரின் இறுதி  யாத்திரை புறப்படுகிறது.
வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில்  போப்  பிரான்சிஸ்  உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று  உருவாக்கப்பட்டது.
புனித மேரி பசிலிக்காவுக்கு  போப் உடல் கொண்டு வரப்பட்டதும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் கூறியுள்ளது.
error: Content is protected !!