Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிதம்பரம் அருகே ஆசைக்கு மறுத்த இளம்பெண் வெட்டிக்கொலை- முதியவர் கைது

சிதம்பரம் அருகே 28 வயது இளம்பெண் காமாட்சி என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த வழக்கில் மகேந்திரன் என்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தில், கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சியிடம், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தவறான நோக்கத்தில் நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, தன் தற்காப்பிற்காக மகேந்திரனை செருப்பால் அடித்துள்ளார்.

அத்துடன் நின்றுவிடாமல், மகேந்திரனை செருப்பால் அடித்த சம்பவத்தை காமாட்சி தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகளை மகேந்திரனின் குடும்பத்தினருக்கு அனுப்பி அம்பலப்படுத்த போவதாகவும் காமாட்சி எச்சரித்துள்ளார். இதனால் தனக்கு அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய மகேந்திரன், கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்துள்ளார்.

இந்த ஆத்திரத்தின் உச்சக்கட்டமாக, மகேந்திரன் நள்ளிரவில் காமாட்சியின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தார். மகேந்திரனின் இந்த வெறிச்செயலைத் தடுக்க முயன்ற காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் அவர் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!