Skip to content
Home » பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணை மேல்பகுதிக்கு செல்ல தடை….

பவானிசாகர் அணைக்கு 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ள நிலையில் இங்கு கோவை ,திருப்பூர்,  ஈரோடு, கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சிறப்பு அனுமதி வழங்கப்படும். அன்றைய தினத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிவர்.

tn

இந்நிலையில் ஈரோடு பவானிசாகர் அணை பகுதியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் மட்டும் அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதி தரப்படும். இந்த சூழலில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால் அணையின் மேல் பகுதிக்கு சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பவானிசாகர் அணை பூங்கா வழக்கம் போல் திறந்து இருக்கும் என்றும் சுற்றுலா பயணிக்க இங்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!