Skip to content
Home » 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி.. 3 மார்க் உறுதி..

10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி.. 3 மார்க் உறுதி..

  • by Senthil

எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆங்கில தேர்வில் வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் புகாரளித்துள்ளனர். கேள்வி எண்கள் 4, 5, 6-ல் குளறுபடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 6 வரையிலான கேள்விகளில் தலா 3 அருஞ்சொற்பொருள் அறிக, எதிர்ச்சொல் அறிக என்பதற்கு பதிலாக 6 கேள்விகளையும் அருஞ்சொற்பொருள் அறிக என்று வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!