Skip to content
Home » தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை

மக்களவை தேர்தல் வரும்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும். தற்போது  மக்களவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை  தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.  வரும் 8ம் தேதி   தலைமை ஆணையர்  ராஜீவ்குமார் சென்னை வருகிறார்.  2 நாட்கள் அவர் தலைமை செயலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.கலெக்டர்கள்,  போலீஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் எந்த தேதியில் தோ்தல் நடத்தலாம், எத்தனை கட்டமாக நடத்தலாம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடி ஏற்பாடுகள்,  வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

 

0 thoughts on “தலைமை தேர்தல் ஆணையர் ….. சென்னையில் 2 நாள் ஆலோசனை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!