Skip to content
Home » திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்

திருப்பதி கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள்

  • by Senthil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது.. செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22-ந் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

இதேபோல நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந் தேதி கருட சேவை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வருவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.  2 பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. மேலும் அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!