திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவரது மகன் ஆலன். இவருக்கு வருகிற 28ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இதை எடுத்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 23ஆம் தேதி ஷாப்பிங் சென்றனர் . பின்னர் அன்று இரவு அனைவரும் படுத்து தூங்கிவிட்டனர் பின்னர் மறுநாள் எழுந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 22. அரை பவுன் தங்க நகைகளை திருமண நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
பீரோவை பூட்டி சாவியை அதன் அருகாமையில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
