செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் சாரதி( 20)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த முகமது இஸ்மாயில் (19)
மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் சாரதி (19)
இவர்களோடு அதே கல்லூரியில் பயின்று வரும் அவரது நண்பர்கள் அப்துல் பாசித் மற்றும் சூர்யா
ஆகியோர் ஊரப்பாக்கம் அருகே கீரப்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றனர்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றபோது அங்கு மது அருந்தியதாக கூறப்படுகிறது…
பின்பு மது போதையில் கல்லூரி மாணவர்கள் கல் குவாரியில் இறங்கி குளித்துள்ளனர் பாசித் மற்றும் சூர்யா இருவரும் குளிக்காமல் கரையிலேயே இருந்துள்ளனர்..
இந்த நிலையில குளித்துக் கொண்டிருந்த போது தீபக்சாரதி மற்றும் முகமது இஸ்மாயில் விஜய் சாரதி 3 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளனர்
மூன்றுமாணவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்..
உடன் வந்த நண்பர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கியதை அறிந்த நண்பர்கள் செய்வது
அரியாது நின்று கொண்டிருந்தனர் பின்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று மாலை வரை தேடிப்பார்த்தும் அவர்கள் உடல் கிடைக்கவில்லை. எனவே இன்று காலை 6 மணிக்கு மீண்டும் தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து காயார் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் காவல்துறையினர் பொத்தேரியில் இருந்து இங்கு வந்து குளிக்க வேண்டிய காரணம் என்ன என்று பாசித் மற்றும் சூர்யாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஒரே நேரத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது…