Skip to content
Home » டிஆர் பாலு, திருநாவுக்கரசர் உள்பட 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

டிஆர் பாலு, திருநாவுக்கரசர் உள்பட 33 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

  • by Senthil

நாடாளுமன்ற மக்களவையில் நுழைந்த 2 பேர் திடீர் புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்பட்டுத்தினர். இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு குறைபாடு காரணமாக திடீரென அவர்கள் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். இது குறித்து மக்களவையில் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தினந்தோறும் கோரிக்கை வைக்கிறார்கள்.

இதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர் கோஷம் போடுகிறார்கள். இதனால் நாடாளுமன்றம் கடந்த சில தினங்களாக அமளியாக உள்ளது. இன்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடு பிரச்னைகளை  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால்  திமுக எம்.பிக்கள் டிஆர் பாலு,  ஆ. ராசா, பழனி மாணிக்கம், தயாநிதி மாறன், தமிழச்சி தங்க பாண்டியன்,  சி.என். அண்ணாதுரை, செல்வம், காங்கிரஸ் எம்.பிக்கள் வசந்த், திருநாவுக்கரசர், ஜெயக்குமார்  உள்ளிட்ட 31 எம்.பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அத்துடன்  இன்று சபையும் ஒத்திவைக்கப்பட்டது.  ஏற்கனவே கனிமொழி எம்.பி. உள்பட 13 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!