அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த 5 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
