Skip to content
Home » பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி…. பைனான்ஸ் உரிமையாளர்கள் 10 பேர் கைது….

  • by Senthil

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கீதாஞ்சலி ஆட்டோ பைனான்ஸ், சிவ பார்வதி பைனான்ஸ், எஸ்.ஜி பைனான்ஸ் ஆகிய 3 தனியார் நிதி நிறுவனத்தை 15 பேர் கொண்ட நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி, 5 கோடி ரூபாய் வரை பணம் பெற்று ஏமாற்றியதாக நிலையில் 25க்கும் மேலான தனி நபர்களிடமிருந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் 3 நிதி நிறுவனத்தை சேர்ந்த 15 பங்குதாரர்களில், தற்போது 10

பேரை கைது செய்து தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். நேற்று 10 பேரிடமும் தொடர் விசாரணையை நடத்தி முடித்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க அவர்களை அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!