நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தவறுதலாக பழத்தின் விதை அவனது தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
