தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்து உள்ளார்.
அதன்படி திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகளின் இயக்குனராக மாற்றப்பட்டார். உயர்கல்வித்துறை செயலாளராக சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மாற்றப்பட்டு, திருச்சி கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதுபோல நெல்லை, தூத்துக்குடி, ஆவடி ஆணையர்களும் மாற்றப்பட்டனர். மதுரை கலெக்டர் சங்கீதா சமூக நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.
இதுபோல சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
மாற்றம் செய்யப்பட்ட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம் வருமாறு: