விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குரும்புரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 65 வயது பெண் உயிரிழந்தார். நேற்றிரவு மீன் குழம்பு சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். எனினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
