ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த 50 செம்மறி ஆடுகள் மீது அவ்வழியே சென்ற லாரி மோதியதில் அவை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அருப்புக்கோட்டைக்கு மரத்தூள் ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் பலியாகின. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பார்த்திபனூர் போலீசார் லாரி ஓட்டுநர் அர்ஜுனனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
