“நேபாள வெள்ளத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட காணாமல் போன 85 பேரைத் தேடும் பணி தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
