Skip to content
Home » அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

அந்த குழப்பம் தான் சாதகம்… திருநாவுகரசர் எம்.பி நம்பிக்கை…

  • by Senthil

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட நாங்கள் வற்புறுத்தினோம். அவரது வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். தோழமை கட்சிகளும் ஆதரவை தந்து பணியாற்ற தொடங்கி விட்டனர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இருந்ததை விட தற்போது உள்ள இடைத்தேர்தலில் நல்ல சாதகமான சூழ்நிலை உள்ளது. தி.மு.க.வின் இந்த 1½ ஆண்டுகால ஆட்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆட்சியில் ஏராளமான பணிகள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் இளங்கோவன் குடும்பத்தினருக்கு அனுதாபமும் உள்ளது. அ.தி.மு.க. பல கூறுகளாக உடைந்து கிடக்கிறது. யார் போட்டியிடுவார்கள் என்பதை கூட அ.தி.மு.க.வினரால் முடிவு செய்ய முடியவில்லை. அவர்களுக்கு சின்னம் கிடைக்குமா?, கிடைக்காதா?, யார் போட்டியிடுவார் என்ற குழப்பமான சூழல் உள்ளது. பா.ஜனதா போட்டியிடுமா? என்ற குழப்பமும் உள்ளது. இவையெல்லாம் எங்களுக்கு சாதகமாக உள்ளதால் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றியை பெறுவார். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதை மோடி, அமித்ஷா தான் முடிவு செய்வார்கள் என்றார் திருநாவுகரசர் எம்பி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!