Skip to content

செந்தில்பாலாஜி ஜாமீன்… இன்று தான் எங்களுக்கு தீபாவளி…பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…

  • by Authour

அக்டோபர் 30 எங்களுக்கு தீபாவளி கிடையாது எங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்த நாள் இன்று தான் எங்களுக்கு தீபாவளி என்று 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பசுமதி பிரபு பேட்டி.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பணமோசடிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த 470 நாட்களாக சிறையில் இருந்துள்ளார்.

கீழமை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்களில் பலமுறை அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் உத்தரவிட்டார்.

அதனை அடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் நிலையில் கரூர் திருமாநிலையூர் பகுதியில் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!