Skip to content

திருச்சியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும்  கலாச்சாரம் பரவி வருகிறது. குறிப்பாக இவர்கள் இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதும், வெளிநாடுகளில் இருந்தும் மிரட்டுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இன்றைய தினம் இந்த மிரட்டல் ஆசாமிகள் திருச்சியை குறிவைத்து உள்ளனர்.  திருச்சியில் இன்று 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டது.

திருச்சி  கேம்பியன் பள்ளி,  காட்டூர் மான்ட்போர்டு பள்ளி,  காஜாநகர்  சமது பள்ளி, திண்டுக்கல் ரோட்டில் உள்ள

ராஜம்கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் ஸ்கூல் மற்றும்  ஜோசப் காலேஜ் என திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போலீசார்  அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சென்று சோதனை போட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!