Skip to content

புகையிலைப் பொருட்கள் விற்பனை… திருச்சியில் 2 கடைகளுக்கு சீல்..

  • by Authour

தமிழக அரசு, புகையிலைப் போதைப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்த புகார்களின் அடிப்படையில், திருச்சி திருவெறும்பூர் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாமலை பகுதிகளில் உள்ள இரு மளிகைக் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழக

\

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்கள் அங்கு மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையிலிருந்து சுமார் 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இருகடைகளையும் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். கடை உரிமையாளர்கள் என். முருகேசன், ஜெ. நாகராஜன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!