சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஸ்குமார், ஐபிஎஸ் அதிகாரியான இவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இது தொடர்பாக பெண் காவலர் டிஜிபியிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததால், ஐபிஎஸ் அதிகாரி மகேஸ்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டார்.

