Skip to content

பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு , அரியலூர் முதலிடம்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது.   சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர்.  இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்  பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு இரண்டாம் இடம்(97.98%),    திருப்பூர்(97.53%),  3ம் இடமும்,    கோவை (97.48) 4ம் இடமும்,  கன்னியாகுமரி(97.01%)5ம் இடமும் பிடித்துள்ளது.

பிளஸ்2 துணைத்தேர்வுகளுக்கு வரும்1 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.   ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும்.  கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக  சதம் எடுத்து உள்ளனர்.   தமிழ்பாடத்தில் 99.15 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  இயற்பியலில் 99.22 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.  தமிழில் 135 பேரும்,  கணிதத்தில் 3022 பேரும் இஅயற்பியலில் 1125 பேரும் சதம் எடுத்து உள்ளனர்.

தேர்வு எழுதிய மாணவர்கள்  7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர். இதில் 4 லட்சத்து 05 ஆயிரத்து 472 மாணவிகளும்,  3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.   இந்த ஆண்டும்  மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் கூட 100க்கு 100 எடுக்கவில்லை.  பிளஸ் 2 தேர்வில்  95.03  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.47% பேர் கூடுதலாக தோச்சி பெற்றுள்ளனர்.

இந்த தகவலை சென்னையில்  பள்ளிகல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ்  தெரிவித்தார்.

error: Content is protected !!