இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது. ,இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். கொரோனா 2020ம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 2023ம் ஆண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சத்து 33 ஆயிரத்து 666 பேர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் மக்கள் சற்று கலக்கம் அடைந்தனர். இந்நிலையில்இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக நிலைமையை சுகாதார அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
