கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.
இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு வைகாசி மாத தேய்பிறை இருந்தாலும் அஷ்டமி முன்னிட்டு ஸ்வாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பெடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வடமாலை சாற்றப்பட்டது.
தொடர்ந்து உதிரிப் பூக்களால் ஆலயத்தின் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு,
நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையின் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.