சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில், போதைப்பொருள் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரயில் நிலையத்தில், சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் உள்பட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம், ரூ.32 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இது ஹவாலா பணம் என கூறப்படுகிறது.
பிடிபட்ட 3 பேரையும் எழும்பூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. இவர்கள் ஒரு நகைகடைக்கு பணத்தை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.