கர்நாடக மாநில அரசின் நிறுவனம் மைசூர் சாண்டல்சோப் நிறுவனம். இது 1916ல் தொடங்கப்பட்டது. சுமார் 110 ஆண்டுகளாக இந்த நிறுவனம் செயல்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் 416 கோடி. ஒரு அரசு நிறுவனம் இத்தனை வருடங்களாக லாபகரமாக இயங்குவது ஆச்சரியம் தான். கர்நாடக அரசின் வருமானத்தில மைசூர் சாண்டல் சோப் முக்கிய பங்கு வகிக்கிறது.
வரும் 2028ம் ஆண்டில் ரூ.5ஆயிரம் கோடி விற்பனையை எட்டுவதே இந்த நிறுவனத்தின் இலக்கு. இந்த நிறுவனம், டிடெர்ஜெண்ட் சோப், சந்தன எண்ணை ஆகியவற்றையும் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டு உள்ளார். அதாவது 2 ஆண்டுகள் விளம்பர தூதராக இருக்க ரூ.6.2 கோடி அவருக்கு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
மைசூர் சாண்டல் சோப்பின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பவம் கன்னட மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கன்னட திரைப்படத் துறையைச் சேர்ந்த திறமையான நடிகைகள் இருக்கும் போது, எதற்காக பாலிவுட் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று முதல்வர் சித்தராமையாவை டேக் செய்து சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தி நடிகைக்கு ஊதியத்தை கொடுப்பதற்கு பதில் உள்ளூர் நடிகைக்கு கொடுக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகா சோப்ஸ் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மைசூர் சாண்டல் சோப்பை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு விளம்பரத் தூதர் தேவை. அவர் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் புகழ் பெற்றிருப்பது அவசியமான ஒன்று. அப்போதுதான் மைசூர் சாண்டல் சோப் உலகம் முழுவதும் சென்று சேரும். தேசிய அளவில் அடுத்தக் கட்டத்தை எட்டுவதற்காக நடிகை தமன்னா விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
90% ஊழியர்கள் நமது இலக்கை கணக்கிட்டு, அவரின் மார்க்கெட் மற்றும் ரசிகர்களின் கவனத்தை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் 90 சதவிகிதம் பேர் கன்னட மக்கள் தான். அதன் மூலமாக கிடைக்கும் லாபம் முழுக்க கர்நாடகா மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 முன்னணி நடிகைகள் நமது மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பதற்காக எப்போதும் இருப்போம்.
ஆனால் நமது பொருட்களை வியாபாரம் செய்வதற்கு தேசிய அளவில் ஒரு முகம் தேவை. கர்நாடகாவைச் சேர்ந்த நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் வேறு நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், அவர்களை எங்களால் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,800 கோடியாகும். அதில் 12 சதவிகிதம் மட்டுமே கர்நாடகாவில் இருந்து ஈட்டப்படுகிறது. மீதமுள்ள 88 சதவிகித வருமானம் மற்ற மாநிலங்களில் இருந்தே ஈட்டப்படுகிறது. இதன் காரணமாக தேசிய அளவில் பல்வேறு மொழி ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வரும் நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.