Skip to content

டிடிவியை வரவேற்று பேனர்… அகற்ற போலீசார் உத்தரவு… திருச்சியில் பரபரப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திருச்சி வந்தார்.திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350 ஆவது சதய விழாவில் கலந்துகொண்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.இன்று மாலையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.இன்று பகலில் இதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.அவரை வரவேற்று நட்சத்திர ஓட்டல் முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு பேனர்கள் அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று திடீரென்று போலீசார் தனியார் ஓட்டல் முன்பு டிடிவி தினகரனை வரவேற்று இருந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று அமமுக நிர்வாகிகளியிடம் போலீசார் கூறியுள்ளனர். அதற்கு அமமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் தலைமையில் நிர்வாகிகள் தன் சிங்,வேதாத்திரி நகர் பாலு,உறையூர் கல்நாயக் சதீஷ்,உமாபதி,தருண்,கல்லணை குணா,பிரகாஷ் உள்பட ஏராளமான அமமுக நிர்வாகிகள் தனியார் ஓட்டல் முன்பு திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பிறகு போலீசாரின் அறிவுரைப்படி நிகழ்ச்சி முடிந்த ஒரே ஒரு பேனர்ரை மட்டும் அகற்றினர்.
error: Content is protected !!