திருச்சி மாநகராட்சி ,எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் மாதிரி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இந்த பள்ளியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைக்க இருக்கிறார்.
இந்த நிலையில் மாதிரி பள்ளியின் தொடக்க விழாவுக்கான பணிகள் நடந்து வருவதை, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி நகரப் பொறியாளர் பி. சிவபாதம், செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் துர்கா தேவி , மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் மற்றும் பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
