Skip to content

18வருட ஏக்கம் தீர்ந்தது ஆர்சிபிக்கு…..கோலி ஆனந்த கண்ணீர்…

18வது  ஐபிஎல்  தொடரின்  இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில்  நடந்தது. ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இரு அணி​யிலும் எந்​த​வித மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. பேட்​டிங்கை தொடங்​கிய பெங்​களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்​கம் கொடுக்க முயன்​றார். அர்​ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விளாசி​னார். இந்த ஓவரில் 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்​டரிக்கு விரட்​டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசை​யில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்​துகளை சந்​தித்த பில் சால்ட் 16 ரன்​கள் எடுத்​தார்.
இதையடுத்து களமிறங்​கிய லியாம் லிவிங்​ஸ்​டன் யுவேந்​திர சாஹல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆஃப் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். இதே ஓவரில் விராட் கோலி பவுண்​டரி ஒன்றை விரட்​டி​னார். இதனால் இந்த ஓவரில் பெங்​களூரு அணிக்கு 14 ரன்​கள் கிடைத்​தன. நிதான​மாக விளை​யாடி வந்த விராட் கோலி 35 பந்​துகளில், 3 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் எடுத்த நிலை​யில் அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் வீசிய பந்​தில் அவரிடமே பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அப்​போது ஸ்கோர் 14.5 ஓவர்​களில் 131 ஆக இருந்​தது.
20 ஓவர்​களில் முடி​வில் பெங்​களூரு அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் குவித்​தது. 191 ரன்​கள்  என்ற இலக்​குடன் பேட் செய்த பஞ்​சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்​சிம்​ரன், பிரியன்ஷ் ஆர்யா ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. பிரியன்ஷ் ஆர்யா 19 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​கள் சேர்த்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டில் பில் சால்ட்​டின் அபார​மான கேட்ச் காரண​மாக ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து ஜோஷ் இங்​லிஷ் களமிறங்க பவர் பிளே​வில் பஞ்​சாப் அணி 52 ரன்​கள் சேர்த்​தது.
பொறுமை​யாக விளை​யாடி வந்த பிரப்​சிம்​ரன் சிங் 22 பந்​துகளில், 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் எடுத்த நிலை​யில் கிருணல் பாண்​டியா பந்​தில் பாயின்ட் திசை​யில் நின்ற புவனேஷ்வர் குமாரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 பந்​துகளில் 1 ரன் எடுத்த நிலை​யில் ரொமாரியோ ஷெப்​பர்டு பந்தை கட் ஷாட் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்டை விளிம்​பில் பட்டு விக்​கெட் கீப்​பர் ஜிதேஷ் சர்​மா​விடம் கேட்ச் ஆனது. ஸ்ரேயஸ் அய்யர் அவுட் ஆனநிலையிலேயே  பஞ்சாபின் வெற்றி  கேள்விக்குறியானது. அனாலும்  மற்ற  வீரர்கள் நிலைமையை புரிந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.
கடைசி 3 ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 47 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. யாஷ் தயாள் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்​தில் அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் (1) ஆட்​ட​மிழக்க ஆட்​டத்​தில் பரபரப்பு அதி​க​மானது. இந்த ஓவரில் யாஷ் தயாள் 6 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். இதனால் பஞ்​சாப் அணிக்கு அழுத்​தம் அதி​கரித்​தது. கடைசி 2 ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 41 ரன்​கள் தேவை​யாக இருந்​தன.புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் சஷாங்க் சிங் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரி விளாச 13 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. ஜோஷ் ஹேசில்​வுட் வீசிய கடைசி ஓவரில் பஞ்​சாப் அணி​யின் வெற்​றிக்கு 29 ரன்​கள் தேவை​யாக இருந்​தன. இதில் முதல் இரு பந்​துகளை​யும் சஷாங் சிங் வீணடித்​தார். இதனால் 4 பந்​துகளில் 29 ரன்​கள் தேவை என்ற நிலை உரு​வாக பெங்​களூரு அணி​யின் வெற்றி உறுதியானது. கடைசி 4 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரியை சஷாங் சிங் விளாசி​னார். எனினும் அது வெற்​றிக்கு போது​மான​தாக அமையவில்​லை. முடி​வில் பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 184 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. சஷாங் சிங் 30 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். பெங்​களூரு அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கிருணல் பாண்​டியா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். யாஷ் தயாள், ஹேசில்​வுட், ரொமாரியோ ஷெப்​பர்டு ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ராயல் சாலஞ்​சர்​ஸ் பெங்​களூரு அணி ஐபிஎல் வரலாற்​றில் முதன்​முறை​யாக கோப்​பையை வென்​றது. இதன் மூலம் அந்த அணி​யின் 18 வருட காத்​திருப்​பு முடிவுக்​கு வந்​துள்​ளது. பெங்​களூரு அணிக்​காக 18 வருடங்​களாக விளை​யாடி வரும்​ வி​ராட்​ கோலி முதன்​முறை​யாக ஐபிஎல்​ ​சாம்​பியன்​ பட்​டத்​தை ருசித்​துள்​ளார்​. பெங்களூரு வெற்றி பெற்றதும் விராட் ஆனந்த கண்ணீர் விட்டார்.  பெங்களூரு வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார்கள்.   வெற்றி செய்தி அறிந்ததும் இரவோடு இரவாக  கர்நாடக மாநிலத்தின்  பல்வேறு இடங்களில்   விழாக்கோலமாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது.  2ம் இடம் பிடித்த அணிக்கு நேற்றைய போட்டியை காண இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவியுடன் வந்திருந்தார்.   சுனக் பூர்வீகம் பஞ்சாப் மாநிலம்  என்றாலும். அவர் நேற்று  பெங்களூரு அணிக்கே  சப்போர்ட் செய்தார்.  பெங்களூரு அணி  சிக்சர் அடிக்கும்போது ஆரவாரம் செய்தார்.  பெங்களூரு வெற்றிபெற்றதும்  மகிழ்ச்சியில் துள்ளினார் சுனக்.   தான்  விராட் கோலியின் ரசிகன் என கூறிய சுனக்  ஆர்சிபி வெற்றியை கொண்டாடினார்.  சுனக்கின் மனைவி  அக்‌ஷதா கர்நாடகத்தை சேர்ந்தவர்.
 18வது ஐபிஎல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த  சாய் சுதர்சன் குஜராத் அணியில் ஆடினார். அவர் 759 ரன்கள் குவித்தார்.  இது தான் இந்த போட்டியின் தனி நபர் அதிகபட்ச  ரன் குவிப்பாகும். இதுபோல குஜராத் வீரர்  பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
18வது ஐபிஎல் போட்டியில்9 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. 1294 சிக்சர்கள், 2245 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன.  அதிகபட்சமாக ஐதராபாத் அணி 286 ரன்கள் சேர்த்தது.  குறைந்தபட்சமாக கொல்கத்தா அணி  95 ரன்களில் சுருண்டது.
   
 
 
error: Content is protected !!