பெண்ணிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 3 வாலிபர்கள் கைது
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி துர்கா தேவி (வயது 43). இவர் திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் ஒரு பேக்கரி அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் அவரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சேவாக், சூர்யா உள்பட மூன்று வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கணவருடன் தகராறு – இளம்பெண் தற்கொலை
திருச்சி மேல பஞ்சப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 52). இவரது மகள் சாவித்திரி (வயது 22). இவருக்கும் கோவிந்தன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் – மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கணவனிடம் கோபித்துக் கொண்டு சாவித்திரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தந்தை ராமன் வீட்டிற்கு வந்து விட்டார் . இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு சாவித்திரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை ராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சமையல் மாஸ்டர்
திருச்சி திருவரங்கம் புலிமண்டபம் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது 59). சமையல் மாஸ்டர்.இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. நாகராஜன் வசித்த வீடு பூட்டி கிடந்தது . இந் நிலையில் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர மூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று நாகராஜனின் வீட்டை பார்த்தனர். அங்கு நாகராஜன் அழகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக…
கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடி கைது
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மனைவி கோமதி (வயது 55), ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (42), திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த அப்துல் யூனுஸ் (வயது 22 )ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கோபிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ.5,200 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.