Skip to content

தவறி விழுந்து பெயிண்டர் பலி- பெண் தற்கொலை -திருச்சி க்ரைம்..

பெயிண்டர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநாதன் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 33)பெயிண்டிங் தொழிலாளி இவர் தற்போது மணப்பாறை டவுன் குழந்தை வேலு தெரு பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் நேற்று திருச்சி ஏர்போர்ட் அருகாமையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டார் அப்போது நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார் இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது சகோதரர் கார்த்திக் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மேல சிந்தாமணி அண்ணா சிலை அருகாமையில் அனுமதி இன்றி 2 பேர் விளம்பர பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர் இது பற்றிய அறிந்த கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாதவன் கோட்டை போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அனுமதி இன்றி பேனர் வைத்த புத்தூர் கீழ வண்ணாரப்பேட்டை திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன்(வயது 41) சிந்தாமணி எஸ் எஸ் கோவில் ஆர் எஸ் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன்( 44 )ஆகிய இரண்டு பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர். மேலும் சத்திரம் காமராஜர் சிலை அருகே அனுமதி இன்றி பேனர் வைத்ததாக ஜீவா நகர் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மீது கோட்டை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை 

சமயபுரம் அருகே உள்ள மாணிக்கபுரம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ் இவரது மனைவி நகோமி சகாயராணி( வயது 39)
இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சமீப காலமாக பீட்டர் ஜேம்ஸ் குடும்பம் வறுமையால் வாடியது.இதனால் மனவேதனை அடைந்த சகாயராணி கடந்த மாதம் 13ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி விழுந்தார் உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மீண்டும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவ்வாறு கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சகாயராணி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது தாய் டெய்சி புளோரா கொடுத்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதியவர் தவறி விழுந்து பலி 

திருச்சி மாவட்டம், தொட்டியம் காட்டுபுதூர், முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணவேலு (வயது 82).
இவர் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி திடீரென இறந்தார். அதன் பின்னர் தனிமையில் இருந்த சரவண வேலு வீட்டின் படிக்கட்டில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.இதில்அவரது முகம் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் முதியவர் சரவணவேலு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அவரது உறவினர் பழனிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டியின் வாழ்நாள் சேமிப்பு திருட்டு..

திருச்சி அரியமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 75) இவர் தினமும் காலை 7 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, சலவை தொழிலுக்கு சென்று விடுவார் பின்னர் வேலை முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், மாரியம்மாள் வேலைக்கு புறப்பட்டு சென்ற நேரம் பார்த்து, அவரது வீட்டு கதவின் பூட்டையும், பீரோ கதவையும் உடைத்து அதில் உள்ளே வைத்திருந்த ஆறு பவுன் தங்க நகை, ரூபாய் 95 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்து, சேர்த்துவைத்திருந்த 5 மோதிரங்கள், 2 செயின் உள்ளிட்ட 6 சவரன் நகைகளும், 95 ஆயிரம் ரொக்கமும் திருட்டுபோனதை கண்டு, மாரியம்மாள் அதிர்ச்சியில் உறைந்து போனார். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை திருச்சி அரியமங்கலம் போலீசார் தேடிவருகிறார்கள்.

error: Content is protected !!